
50 வயதுடைய ஹோட்டல் உரிமையாளரான தனவந்தர் ஒருவர் 24 வயதுடைய பெண்ணை பேஸ்புக் வாயிலாக காதலித்துள்ளார்.
நீர்கொழும்பை சேர்ந்த குறித்த பெண், குறித்த ஹோட்டல் உரிமையாளருடன் நீண்ட காலமாக தொடர்பில் இருந்துள்ளார். பின்னர் குறித்த பெண் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளர்.
விசாரணையின் போது குறித்த பெண்ணால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் தானும் ஹோட்டல் உரிமையாளரும் எடுத்துக் கொண்ட அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக ஹோட்டல் உரிமையாளர் அச்சுறுத்தல் விடுத்தமையினால் மன வருத்தமடைந்து இந்த முடிவை எடுத்ததாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், குறித்த ஹோட்டலிம் உரிமையாளரான 50 வயதுடைய நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
