நாட்டில் இன்றைய தினம் மேலும் 05 கொரோனா மரணங்கள் பதிவாகின.
அனுராதபுரத்தை சேர்ந்த 72 வயது பெண்ணொருவர், ஹெம்மாதகம பகுதியை சேர்ந்த 19 பெண்ணொருவர், தர்கா நகர் பகுதியை சேர்ந்த 51 வயது பெண்ணொருவர், கொழும்பு 06ஐ சேர்ந்த 78 வயது ஆணொருவர், ஜாஎல பகுதியை சேர்ந்த 59 வயது பெண்ணொருவருமே இவ்வாறு பதிவாகினர்.
$ads={1}
ஹெம்மாதகம பகுதியில் மரணித்த 19 வயது யுவதி, கண்டி தேசிய வைத்தியசாலையில் கொரோனா நிமோனியா மற்றும் மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 06ஆம் திகதி மரணித்துள்ளார்.
இந்நிலையில் நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 507ஆக அதிகரித்துள்ளது.