இலங்கையில் உள்ள அனைத்து மதரஸாக்களுக்கும் தடை விதிக்கப்படாது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இன்று பாராளுமன்றத்தில் உறுதியளித்தார்.
தேசிய கல்வி கொள்கையை மீறும் மதரஸாக்கள் மட்டுமே தடை செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
"5-16 வயதுகளுக்கு உட்பட்டோருக்கு மார்க்கம் மற்றும் மொழியை மட்டுமே கற்பிக்கும் மதரஸாக்கள் தடை செய்யப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
இந்த முடிவுக்கு முஸ்லிம் குழுக்களும், அமைப்புகளும் உறுதுணையாக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இலங்கையில் 2000 க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் இருப்பதாக சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.
இலங்கையில் யாரும் பாடசாலையொன்றை திறந்து அவர்கள் விரும்புவதை கற்பிக்க முடியாது என்று அவர் கூறியிருந்தார்.
அனைத்து பாடசாலைகளும் தேசிய கல்வி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
இதன் அடிப்படையில், இலங்கையில் 1000 க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் தடை செய்யப்படும் என்று வீரசேகர தெரிவித்தார்.
தேசிய கல்வி கொள்கையை மீறும் மதரஸாக்கள் மட்டுமே தடை செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
"5-16 வயதுகளுக்கு உட்பட்டோருக்கு மார்க்கம் மற்றும் மொழியை மட்டுமே கற்பிக்கும் மதரஸாக்கள் தடை செய்யப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
இந்த முடிவுக்கு முஸ்லிம் குழுக்களும், அமைப்புகளும் உறுதுணையாக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இலங்கையில் 2000 க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் இருப்பதாக சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.
இலங்கையில் யாரும் பாடசாலையொன்றை திறந்து அவர்கள் விரும்புவதை கற்பிக்க முடியாது என்று அவர் கூறியிருந்தார்.
அனைத்து பாடசாலைகளும் தேசிய கல்வி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
இதன் அடிப்படையில், இலங்கையில் 1000 க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் தடை செய்யப்படும் என்று வீரசேகர தெரிவித்தார்.