ஓடிப்போவோமா? என்று பக்கத்து வீட்டு பெண்ணுக்கு காதல் கடிதம்; 78 வயது முதியவர் புகையிரதம் முன் பாய்ந்து பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஓடிப்போவோமா? என்று பக்கத்து வீட்டு பெண்ணுக்கு காதல் கடிதம்; 78 வயது முதியவர் புகையிரதம் முன் பாய்ந்து பலி!


16 வருடங்களின் முன்னர் அயல்வீட்டு பெண்ணுக்கு எழுதிய காதல் கடிதம் மனைவியின் பார்வைக்கு கிடைத்ததால், வீட்டைவிட்டு வெளியேறிய 78 வயது முதியவர் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.


கேகாலை பொது மருத்துவமனைவியில் அவரது மரண விசாரணை நடந்தபோது, இந்த தகவல் வெளியானது.


கேகாலை பொது மருத்துவமனையின் மரண விசாரணை அதிகாரி ரேணுகா சுபோதினி களுஆராச்சி நிசங்க முன்னிலையில் மரணவிசாரணை இடம்பெற்றது. உயிரிழந்தவர் கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்டவர். இறந்தபோது அவருக்கு வயது 78. மூன்று பிள்ளைகளின் தந்தை.


ரம்புக்கனை புகையிரத நிலையத்திற்கு அருகில் முதியவர் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்திருந்தார். அவரது சிதைந்த சடலம் மீட்கப்பட்டது. ஆனால் அடையாளம் காண முடியவில்லை.


5 நாட்களின் பின்னர் மனைவி, பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டனர். கடந்த 22ஆம் திகதி மரண விசாரணை இடம்பெற்றது. உயிரிழந்த முதியவரின் மனைவி சாட்சியமளித்தார்.


“சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு, என் கணவர் அயல்வீட்டு பெண்ணுக்கு ஒரு காதல் கடிதம் எழுதியுள்ளார். அந்தப் பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். எனது கணவர் எழுதிய கடிதம் அவரது மகனால் கண்டுபிடிக்கப்பட்டு என்னிடம் கொண்டு வரப்பட்டது. இருவரும் ‘ஓடிப்போய் நன்றாக வாழ்வோம்’ என்று என் கணவர் அவளுக்கு எழுதியிருந்தார். இந்த கடிதத்தைப் பற்றி நான் என் கணவரிடம் கேட்டபோது, ​​அவர் என்னுடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார். அப்போது அவரது கணவருக்கு 62 வயது. 06 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய கணவர் திரும்பி வரவில்லை. அவர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இன்று அவரது உடலைப் பார்த்தோம்“ என்றார்.


16 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் அடுத்த வீட்டு பெண்ணுக்கு  எழுதிய காதல் கடிதத்தையும் மரண விசாரணை அதிகாரிக்கு வழங்கினார்.


அது தற்கொலையென முடிவான பின்னர், மனைவி சடலத்தை பொறுப்பேற்று இறுதிச்சடங்கை செய்தார்.


-தமிழ் பக்கம்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.