ஏறாவூர் 02
சாய்ந்தமருது 02
மட்டக்களப்பு 01
காத்தான்குடி 01
அக்கரைப்பற்று 01
சம்மாந்துறை 01
அட்டாளைச்சேனை 01
எனும் அடிப்படையிலேயே இந்த ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டன.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், சடலங்களை அடக்கம் செய்யப்படும் போது, மத அனுஸ்டானங்களை மேற்கொள்ளவும், அனுமதி வழங்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கணபதிபிள்ளை கருணாகரன் எமது கெப்பிடல் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதேவேளை, கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்ககோரி கடந்தகாலங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கபட்டன.
இந்நிலையில், நீண்ட காலத்திற்கு பின்னர் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அதற்கென சுகாதார அமைச்சினால் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.
இதேவேளை, கிளிநொச்சி – இரணைத்தீவு பகுதியிலும் சடலங்களை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதற்கு தொடர்ச்சியாக தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இரணைத்தீவு பகுதியில் சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானத்திற்கு எதிராக கிளிநொச்சியில் இன்று மூன்றாவது நாளாகவும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.