சடலங்களை அடக்கம் செய்யும் போது மத அனுஸ்டானங்களுக்கும் அனுமதி? இதுவரை 09 ஜனாஸாக்கள் நல்லடக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சடலங்களை அடக்கம் செய்யும் போது மத அனுஸ்டானங்களுக்கும் அனுமதி? இதுவரை 09 ஜனாஸாக்கள் நல்லடக்கம்!


கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஒன்பது பேரின் சடலங்கள் கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஏறாவூர் 02
சாய்ந்தமருது 02
மட்டக்களப்பு 01
காத்தான்குடி 01
அக்கரைப்பற்று 01
சம்மாந்துறை 01
அட்டாளைச்சேனை 01

எனும் அடிப்படையிலேயே இந்த ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டன.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், சடலங்களை அடக்கம் செய்யப்படும் போது, மத அனுஸ்டானங்களை மேற்கொள்ளவும், அனுமதி வழங்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கணபதிபிள்ளை கருணாகரன் எமது கெப்பிடல் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்ககோரி கடந்தகாலங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கபட்டன.

இந்நிலையில், நீண்ட காலத்திற்கு பின்னர் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அதற்கென சுகாதார அமைச்சினால் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.

$ads={1}

இதேவேளை, கிளிநொச்சி – இரணைத்தீவு பகுதியிலும் சடலங்களை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதற்கு தொடர்ச்சியாக தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இரணைத்தீவு பகுதியில் சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானத்திற்கு எதிராக கிளிநொச்சியில் இன்று மூன்றாவது நாளாகவும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.