சலாவ - கொஸ்கம பகுதியில் கொழும்பு - அவிஸ்ஸாவெல்ல சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலலேயே ஒருவர் பலியாகியுள்ளார்.
நேற்று மாலை 6 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கர வேண்டி பௌசர் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மேலும் குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த கொஸ்கம பகுதியை சேர்ந்த 68 வயதுடைய பயணியே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஓட்டுநர் மற்றும் சிறுவன் ஒருவரும் பலத்த காயங்களுடன் அவிஸ்ஸாவெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பௌசர் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.