ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான புதிய தீர்மானம் -பிரித்தானியா உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான புதிய தீர்மானம் -பிரித்தானியா உறுதி!


இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பிலான புதிய தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.


ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரித்தானியாவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி Julian Braithwaite நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, இலங்கை, சிரியா மற்றும் தென் சூடான் ஆகிய நாடுகளுக்கு எதிரான தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், கனடா, ஜேர்மனி, மொன்டினீக்ரோ, வடக்கு மெசிடோனியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளடங்கிய இலங்கை தொடர்பான மத்திய குழுவினால், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்த தீர்மானம் முன்வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் அலுவலகத்தினால் வெளியிடப்படும் அண்மைய அறிக்கையில் இந்த தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும், ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரித்தானியாவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி Julian Braithwaite குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.