வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சீ.பி. ரத்நாயக்கவுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ முகாம் ஒன்றில் வைத்தே அமைச்சருக்கு இவ்வாறு தடுப்பூசி வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
அமைச்சர் சீ.பி. ரத்நாயக்கவுடன் இருந்த சிலருக்கு கொரோனா தொற்றுறுதியானதை அடுத்து இவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இருப்பினும் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் போது கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டது.