கொழும்பு - திருகோணமலை வீதியில் உள்ள கந்தளாய் பகுதியில் ஆணொருவர் தனது மனைவியை சுமார் 35 தடவை கத்தியால் தாக்கி பலத்த காயப்படுத்தியுள்ளார்.
அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததன் காரணமாக அது நிகழ்ந்தது என தெரிய வந்துள்ளது.
தாக்குதலில் பலத்த காயமடைந்த குறித்த பெண் திருகோணமலை மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளில் சம்பவம் நடந்த நேரத்தில் ஒரு போலீஸ் அதிகாரி சம்பவ இடத்தை நெருங்கி பின்னர், எந்தவித முயற்சியும் எடுக்காமல் சிறிது நேரத்திலேயே அங்கிருந்து வெளியேறும் காட்சி பதிவாகியுள்ளது.