WATCH: கோட்டாபயவுடன் நேருக்கு நேர் மோதிக்கொள்ளத் தயார்! -அனுர குமார

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: கோட்டாபயவுடன் நேருக்கு நேர் மோதிக்கொள்ளத் தயார்! -அனுர குமார


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேருக்கு நேர் மோதிக்கொள்ளத் தயார் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நேற்று (18) நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி கோட்டாபய தம்முடன் நேருக்கு நேர் மோதுவதற்கு முயற்சிப்பதாகவும் அந்த சவாலை ஏற்றுக்கொள்வதாகவும் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


ஆணைக்குழுக்கள் முன்னிலையில் எம்மை அழைத்து விசாரணை நடாத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவ்வாறு ஆணைக்குழுவினை நிறுவி விசாரணை நடத்துமாறு தாம் சவால் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் கதவுகள் மூடப்பட்ட நிலையில் நடாத்தப்படக் கூடாது எனவும் மக்கள் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.


கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மேற்கொண்ட சகல ஊழல் மோசடிகள் பற்றியும் அம்பலபடுத்த தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


மிகவும் குறுகிய காலத்தில் பெருந்தொகை பணம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் எவ்வாறு பணம் சம்பாதித்தார்கள் என்பது பற்றி ஆணைக்குழுவின் எதிரில் அம்பலப்படுத்த தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கோட்டாபய ராஜபக்ஷ மட்டுமன்றி, ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது சகாக்களும் இதே வகையிலான ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.