இலங்கையில் நேற்றைய நாள் முடிவில் புதிதாக 08 மரணங்கள் பதிவாகின, அதன்படி நாட்டில் இடம்பெற்ற மொத்த கொரோனா மரணங்கள் 430 ஆக உயர்ந்தது.
தெமட்டகொடை பகுதியை சேர்ந்த 67 வயது பெண்ணொருவர், கொழும்பு 08ஐ சேர்ந்த 58 வயது ஆணொருவர், மீகோட பகுதியை சேர்ந்த 43 வயது ஆணொருவர், ரிதிமாலியத்த பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணொருவர், தெகட்டன பிரதேசத்தை சேர்ந்த 52 வயது ஆணொருவர், கொழும்பு 10ஐ சேர்ந்த 86 வயது ஆணொருவர், வாழைத்தோட்டம் பிரதேசத்தை சேர்ந்த 74 வயது பெண்ணொருவர் மற்றும் வத்தளை பகுதியை சேர்ந்த 81 வயது ஆணொருவருமே இவ்வாறு பதிவாகினர்.
மேலும் நேற்றைய நாள் முடிவில் புதிதாக 757 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டனர்.