WATCH: துபாய் ஆட்சியாளரின் மகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்! வெளியான அதிர்ச்சி காணொளி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: துபாய் ஆட்சியாளரின் மகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்! வெளியான அதிர்ச்சி காணொளி!


தான் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், தமது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது எனவும் துபாய் ஆட்சியாளர் ஷேக் முகம்மதுவின் மகள் ஒருவர் கதறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


துபாய் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணை ஜனாதிபதி மற்றும் பிரதமருமான ஷேக் முகம்மதுவிற்கு பல மனைவிகள் உள்ளனர். அவர்களில் ஒரு மனைவிக்குப் பிறந்த மகளான ஷேக்கா லத்தீபா, கடந்த 2018 மார்ச் மாதம் துபாயில் இருந்து கடல் வழியாக வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.


இந்தியாவுக்கு வர முயன்ற அவரை இந்திய கடலோர காவற்படை உதவியுடன் ஷேக் முகம்மதுவின் பாதுகாப்பு படையினர் வழிமறித்து பிடித்தனர்.


பின்னர் துபாய் அல் அவயர் மத்திய சிறையில் தான் 03 மாதங்கள் அடைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் சிறையாக மாற்றப்பட்ட வில்லா ஒன்றில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாகவும் ஷேக்கா லத்தீபா கூறும் செல்போன் வீடியோ காட்சிகளை பிரபல சர்வதேச ஊடக நிறுவனமொன்று வெளியிட்டுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.