கொரோனா தொற்று காரணமாக 4 மாத குழந்தையொன்று மரணித்துள்ள சம்பவமொன்று பேராதனை பகுதியில் பதிவாகியுள்ளது.
கண்டி - பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 4 மாத குழந்தையொன்று திடீரென உயிரிழந்துள்ளது.
இதனையடுத்து மேற்கொண்ட PCR பரிசோதனையின் போது குறித்த குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கண்டி - நுகவெல பகுதியில் வசித்து வந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.