ஒரு கிலோ தங்கம் 93 லட்சம்? விளம்பரம் இட்டு பெருந்தொகை பணம் கொள்ளை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரு கிலோ தங்கம் 93 லட்சம்? விளம்பரம் இட்டு பெருந்தொகை பணம் கொள்ளை!


தங்க நகைகளை விற்பதாகக் கூறி நபர்களை வரவழைத்து அவர்களிடமிருந்து பணத்தை கொள்ளையிட்டமை தொடர்பில் குருணாகல் குற்ற விசாரணை பிரிவினரால் 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மொரட்டுவை, கடுவலை, ராகம மற்றும் வெயாங்கொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர். 


மேலும் இவர்களிடமிருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த 06 சந்தேக நபர்களில் 47 வயதுடைய ராகம பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றார்.


குறித்த பெண் தொலைபேசி ஊடாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் தங்க நகைகள் விற்பனைக்கு உள்ளதாகத் தெரிவித்து புகைப்படங்களை அனுப்பி ஏனையோரை தொடர்பு கொண்டுள்ளார். அத்தோடு ஒரு கிலோ தங்கம் 93 இலட்சத்துக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.


இதன்போது நகைகளை கொள்வனவு செய்ய வருபவர்களிடமிருந்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. குருநாகல் குற்ற விசாரணைப் பிரிவு இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது என்றார்.


-எம்.மனோசித்ரா


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.