WATCH: கொரோனா மரணம் நல்லடக்கம் செய்ய நாம் கடந்த டிசம்பர் மாதமே அனுமதி கொடுத்தோம்! நிபுணர் குழுவின் தலைவர் அதிரடி பேட்டி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: கொரோனா மரணம் நல்லடக்கம் செய்ய நாம் கடந்த டிசம்பர் மாதமே அனுமதி கொடுத்தோம்! நிபுணர் குழுவின் தலைவர் அதிரடி பேட்டி!


கொரோனா மரணங்கள் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை வழங்க சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவரான மூத்த பேராசிரியர் ஜெனிபர் பெரேரா, நாட்டில் நிலவும் கொரோனா மரணங்களை அடக்கம் மற்றும் தகனம் செய்ய அவரும் அவரது குழுவும் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.


தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


அவர் அதில் மேலும் தெரிவிக்கையில்,


அவர் உட்பட 09 பேர் கொண்ட குழு டிசம்பர் 24 அன்று நியமிக்கப்பட்டதாகவும், அதற்கான அறிக்கை  டிசம்பர் 28 அன்று சமர்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.


மேலும் இது குறித்த பரிந்துரைகள் அவசரமாக தேவை என்று தெரிவிக்கப்பட்டது. எனவே, நாம் விரைந்து அதனை வழங்க நடவடிக்கை எடுத்தோம் என்று அவர் தெரிவித்தார்.


"தகனம் மற்றும் அடக்கம் ஆகிய இரண்டிற்கும் நாங்கள் அனுமதி கொடுத்தோம்." மேலும் அடக்கம் செய்யும் பட்சத்தில் நாம் 07 பரிந்துரைகளை கட்டாயம் கடைபிடிக்குமாறு தெரிவித்தோம்.' என்றார்.


1. அடக்கம் செய்யப்பட வேண்டிய உடல் என்றால், அது சம்பந்தமாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட வேண்டும், அவர் இந்த விஷயத்தை மேற்பார்வையிட வேண்டும்.


2. புதைக்கப்படும் உடலை எம்பாம் செய்யவோ அல்லது வீட்டிற்கு கொண்டு செல்லவோ அனுமதி இல்லை.


3. அடக்கம் அல்லது தகனம் இறந்து 24 மணி நேரத்திற்குள் செய்யப்பட வேண்டும்.


4. இறந்தவரின் உடலை 04 குடும்ப உறுப்பினர்களுக்கு 5 நிமிடங்களுக்கு பாதுகாப்பான தூரத்தில் இருந்து பார்க்க அனுமதிக்க முடியும்.


5. உடலை அடக்கம் செய்யும் பட்சத்தில் இரு உடல் பையில் (இரண்டு சவப் பைகள்) பாவித்து தண்ணீருக்கு வெளிப்படாதவாறு அடக்கம் செய்ய வேண்டும்.


6. தகனம் அல்லது அடக்கம் செய்யும் இடத்தில் ஒரு மதத் தலைவர் மாத்திரம் சென்று மத நடவடிக்கைகளை செய்ய அனுமதி உண்டு.


7. சவப்பெட்டியை மூடிய பின்னர் எந்த காரணத்திற்காகவும் திறக்க கூடாது.


போன்ற இந்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.


$ads={1}


மேலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மரணங்களை அடக்கம் செய்யும் போது வைரஸ் நிலத்தடி நீரில் நுழைவதற்கான சாத்தியம் குறித்து ஏதேனும் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளதா என்று அவரிடம் வினவிய போது,


எம் நாட்டில் அவ்வாறான ஆராய்ச்சி எதுவும் நடத்தப்படவில்லை என்று கூறினார். வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி அறிக்கைகளின் அடிப்படையில் அவர் உள்ளிட்ட நிபுணர்களின் குழுவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.


-எம்.எம். அஹ்மத்



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.