இந்த அரசு நாட்டுக்குள் போடும் விளையாட்டு ஜெனிவாவில் செல்லுபடியாகாது! -எம். வேலு குமார்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்த அரசு நாட்டுக்குள் போடும் விளையாட்டு ஜெனிவாவில் செல்லுபடியாகாது! -எம். வேலு குமார்


இலங்கைக்குள் விளையாடுவதைப் போன்று ஜெனிவாவில் அரசாங்கத்தால் விளையாட முடியாது. விளையாட்டுக்களின் மூலம் உள்நாட்டு மக்களை ஏமாற்றினாலும், சர்வதேசத்தை ஏமாற்ற முடியாது. எனவே நேர்மையாக செயற்பட வேண்டும். வெளிநாட்டு கொள்கைகளை முறையாக பேண வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலு குமார் தெரிவித்தார்.


கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், மேலும் தெரிவிக்கையில்,


வெளிநாடுகளுக்கு தேசிய சொத்துக்களை விற்பதற்கு நாம் ஒருபோதும் ஆதாரவளிக்க மாட்டோம். ஆனால் இராஜதந்திர தொடர்புகளை சுமூகமாக பேண வேண்டியது அத்தியாவசியமாகும். எனினும் அரசாங்கம் அதனை முறையாக பேணுவதாகத் தெரியவில்லை. ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சிடமும் அரசாங்கம் பின்பற்றும் வெளிநாட்டு கொள்கை என்ன என்று வினவுகின்றோம்.


கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தொடர்பில் ஜனாதிபதி கூறிய கருத்துக்களும் அதற்கு வெளியிடப்பட்டுள்ள எதிர்ப்புக்களும், விமல் வீரவின்சவின் செயற்பாடுகளும் அரசாங்கத்தின் ஸ்திரமற்ற செயற்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. மறுபுறம் அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை குறைப்பதாகக் கூறிக் கொண்டு அதனை அதிகரித்துள்ளனர்.


மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதிக பலத்தைக் கொண்டுள்ள அரசாங்கத்திற்கு வெறும் 20 கம்பனிகளை கட்டுப்படுத்த முடியாதா? பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளம் பெற்றுக் கொடுக்கப்படும் என்று கூறிய உடனேயே பெருந்தோட்ட கம்பனிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அரசாங்கமும் கம்பனிகளுடன் இணைந்தே செயற்படுகின்றது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.


இலங்கைக்குள் அரசாங்கம் எவ்வாறு வேண்டுமானாலும் விளையாடலாம். ஆனால் ஜெனிவாவிலும் அதே விளையாட்டை காண்பிக்க முடியாது. விளையாட்டுக்களின் மூலம் உள்நாட்டு மக்களை ஏமாற்றினாலும், சர்வதேசத்தை ஏமாற்ற முடியாது. எனவே நேர்மையாக செயற்பட வேண்டும். வெளிநாட்டு கொள்கைகளை முறையாக பேண வேண்டும் என்றார்.


-எம்.மனோசித்ரா


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.