இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறக்கும் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் உறுதி அளிக்கவில்லை என்று ஆளும் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று தெரிவித்துள்ளது.
இன்றைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடகவியலாளர் சந்திப்பின் போது உரையாற்றிய அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன, 'அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும்' என்று மாத்திரமே பிரதமர் கூறியதாகவும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று அவர் கூறவில்லை.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய அனுமதிப்பது நாட்டின் சுகாதார அதிகாரிகளால் எடுக்கப்பட வேண்டிய ஒரு முடிவு என்று அவர் சுட்டிக்காட்டினார்.