பதுளை பகுதியில் இன்று (15) காலை முதற்தடவையாக பாடசாலைக்குச் சென்ற 6 வயது சிறுவன் கண்டைனர் லொரி (Container) மோதியதில் உயிரிழந்துள்ளார்.
பதுளை அசேலபுர பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயது மாணவர் சிவனேசன் வருண் பிரதீஷ், தனது இரட்டை சகோதரர் மற்றும் பாட்டியுடன் பாடசாலைக்கு செல்லும்போது விபத்தில் சிக்கியுள்ளார்.
பதுளை எரிபொருள் நிலையம் முன் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் சிறுவனின் பாட்டிக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, மற்றைய இரட்டை சகோதரர் நல்ல நிலையில் உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வண்டியின் சாரதி பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பதுளை அசேலபுர பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயது மாணவர் சிவனேசன் வருண் பிரதீஷ், தனது இரட்டை சகோதரர் மற்றும் பாட்டியுடன் பாடசாலைக்கு செல்லும்போது விபத்தில் சிக்கியுள்ளார்.
பதுளை எரிபொருள் நிலையம் முன் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் சிறுவனின் பாட்டிக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, மற்றைய இரட்டை சகோதரர் நல்ல நிலையில் உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வண்டியின் சாரதி பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.