VIDEO : முதற்தடவையாக பாடசாலை செல்லும் போது பரிதாபமாக விபத்துக்குள்ளாகி பலியான சிறுவன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO : முதற்தடவையாக பாடசாலை செல்லும் போது பரிதாபமாக விபத்துக்குள்ளாகி பலியான சிறுவன்!

பதுளை பகுதியில் இன்று (15) காலை முதற்தடவையாக பாடசாலைக்குச் சென்ற 6 வயது சிறுவன் கண்டைனர் லொரி (Container) மோதியதில் உயிரிழந்துள்ளார்.

பதுளை அசேலபுர பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயது மாணவர் சிவனேசன் வருண் பிரதீஷ், தனது இரட்டை சகோதரர் மற்றும் பாட்டியுடன் பாடசாலைக்கு செல்லும்போது விபத்தில் சிக்கியுள்ளார்.

பதுளை எரிபொருள் நிலையம் முன் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் சிறுவனின் பாட்டிக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, மற்றைய இரட்டை சகோதரர் நல்ல நிலையில் உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வண்டியின் சாரதி பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.