ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சில நாடுகள் இலங்கைக்கான தமது ஆதரவை வௌிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
இதன் போது 15 நாடுகள் இதுவரை இலங்கைக்கு மனித உரிமைகள் பேரவையில் தமது ஆதரவை வௌிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
$ads={1}
சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், நிக்கரகுவா, வியட்னாம், கியூபா, சிரியா, ஈரான், எகிப்து, அஸர்பைஜான், கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளே இதுவரை இலங்கைக்கு தமது ஆதரவை வௌிப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்தியா இதுவரை இலங்கைக்கு தமது ஆதரவை வௌிப்படுத்தவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.