இலங்கையில் ஜனாஸாக்கள் மீதான கட்டாய தகனம் இடைநிறுத்தப்பட வேண்டும் - ஐ. நா பொது உரிமைகள் பேரவையின் போது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC)!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் ஜனாஸாக்கள் மீதான கட்டாய தகனம் இடைநிறுத்தப்பட வேண்டும் - ஐ. நா பொது உரிமைகள் பேரவையின் போது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC)!

கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஜனாஸாக்கள் மீதான கட்டாய தகனங்களை நிறுத்துமாறு இலங்கை அரசிடம் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொது உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வின் உயர் மட்டப் பிரிவில் நேற்று (24) உரையாற்றிய் OICயின் பொதுச் செயலாளர் டாக்டர் யூசுப் அல் ஒதமீன் இந்த கோரிக்கையை விடுத்தார்.

OIC யில் அங்கத்துவம் இல்லாத முஸ்லிம் சமூகங்களின் நிலைமையை கண்காணிக்க OIC ஆர்வமாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

கொரோனா தொற்றுக்கு இலக்கான உடல்களை (ஜனாஸாக்களை) அடக்கம் செய்வதற்கான உரிமை இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதால், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சூழ்நிலை குறித்து ஓ.ஐ.சி கவலை தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

பாதிக்கப்பட்ட ஜனாஸாக்களை அடக்கம் செய்வது இஸ்லாமிய வழிமுறைகளை பின்பற்றுவது, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களையும் கடைப்பிடிப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை உத்தரவாதம் செய்வதற்கும் மதிப்பதற்கும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை அரசை OIC கேட்டுக்கொள்கிறது என்று டாக்டர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

- எம். ஐ. மொஹமட்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.