ஹர்த்தால் நேரத்தில் கொள்ளை - சம்பவம் CCTV கெமராக்களில் பதிவாகின!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹர்த்தால் நேரத்தில் கொள்ளை - சம்பவம் CCTV கெமராக்களில் பதிவாகின!

நேற்று (06) காலை ஹட்டனில் உள்ள சிட்டிபிளாசா கட்டிடத்தில் உள்ள கையடக்க தொலைப்பேசி விற்பனை நிலையத்தில் இருந்து நூறாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கையடக்கத் தொலைபேசிகள் திருடப்பட்ட வழக்கில் சந்தேக நபர்களை கைது செய்ய ஹட்டன் பொலிசார் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட அடிப்படை ஊதியத்தினை ரூ. 1,000 ஆக உயர்த்தக்கோரி, கடந்த 5 ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்களின் ஹர்த்தலுக்கு ஆதரவாக ஹட்டனில் உள்ள கடைகள் ஐந்து நாட்களுக்கு மூடப்பட்டன. 

6 ஆம் திகதி காலையில் சிட்டி பிளாசா கட்டிடத்திற்குள் இரண்டு நபர்கள் நுழைந்து, கடையை உடைத்து தொலைபேசிகளை எடுத்துச் செல்ல முயன்றபோது, ​​ஹட்டன் டிக்கோயா நகராட்சி மன்ற பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கட்டிடம் மற்றும் கடைகளை ஆய்வு செய்ய வந்தபோது இரு சந்தேகநபர்களும் தப்பிச் சென்றுள்ளனர். 

குறித்த விற்பனை நிலையத்தில் மிகவும் விலையுயர்ந்த தொலைபேசிகளை மட்டுமே திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சந்தேக நபர்கள் இருவரும் சிட்டிபிளாசா கட்டிடத்தினுள் நுழையும் சி.சி.டி.வி காட்சிகள் குறித்த கட்டிடத்தில் உள்ள துணிக்கடை ஒன்றின் பாதுகாப்பு கேமராக்களில் பதிவாகியிருந்தன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.