கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களுடைய சடலங்களை அடக்கம் செய்வது குறித்த தீர்மானங்களை சுகாதார துறையினரே முன்னெடுப்பார்கள் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
குண்டசாலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்வரும் நாட்களில் அது தொடர்பான திர்மானங்களில் வெளிவருமென எதிர்ப்பார்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொதுஜன பெரமுன கட்சிக்குள் ஜனநாயக ரீதியான நிலைமை காணப்படுவதாகவும், அதனால் கருத்து வெளியிடும் சுதந்திரம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிலரின் கருத்துக்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தாலும் அது குறித்து ஆராய்ந்து நடவடிக்கைகளை ஏற்ப்பட்டுத்தப்படுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், அவ்வாறு சமர்ப்பிக்க்பட்டதும், அதனை வெளிப்படுத்துவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுமெனவும் அமைச்வர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.