கொரோனா சடலங்களை அடக்கம் செய்வது குறித்த அமைச்சர் கெஹெலிய கருத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா சடலங்களை அடக்கம் செய்வது குறித்த அமைச்சர் கெஹெலிய கருத்து!

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களுடைய சடலங்களை அடக்கம் செய்வது குறித்த தீர்மானங்களை சுகாதார துறையினரே முன்னெடுப்பார்கள் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

குண்டசாலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்வரும் நாட்களில் அது தொடர்பான திர்மானங்களில் வெளிவருமென எதிர்ப்பார்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொதுஜன பெரமுன கட்சிக்குள் ஜனநாயக ரீதியான நிலைமை காணப்படுவதாகவும், அதனால் கருத்து வெளியிடும் சுதந்திரம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிலரின் கருத்துக்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தாலும் அது குறித்து ஆராய்ந்து நடவடிக்கைகளை ஏற்ப்பட்டுத்தப்படுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான  அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், அவ்வாறு சமர்ப்பிக்க்பட்டதும், அதனை வெளிப்படுத்துவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுமெனவும் அமைச்வர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.