வாகன இறக்குமதிகளுக்கு எப்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்? மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாகன இறக்குமதிகளுக்கு எப்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்? மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!

வாகனங்கள் உள்ளிட்ட இறக்குமதிகளுக்கு அரசாங்கத்தினரால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நீடிக்கும் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே மத்திய வங்கி ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்படி, வெளிநாட்டு கடன் தொகைகளை செலுத்தி, இலங்கையின் பொருளாதாரம் சம நிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் இதனை தளர்த்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கடந்த ஆண்டு முதல் நாட்டின் பொருளாதாரத்தை சமநிலைப்படுத்துவதற்காகவே உலர் மஞ்சல் மற்றும் வாகனங்களுக்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், குறித்த கட்டுப்பாடு குறுகிய கால சிரமங்களை ஏற்படுத்தியதுடன், நீண்ட கால பார்வையின் அடிப்படையில் ஒரு சிறந்த வழியாக காணப்படுகின்றதாகவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.