ஐ.நா வின் மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை; இலங்கை படையினரை அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை இடைநிறுத்த வேண்டும்! -ஜஸ்மின் சூகா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐ.நா வின் மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை; இலங்கை படையினரை அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை இடைநிறுத்த வேண்டும்! -ஜஸ்மின் சூகா

yasmin sooka

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையை தொடர்ந்து இலங்கை படையினரை அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை ஐக்கிய நாடுகள் இடைநிறுத்த வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக தெரிவு செய்யப்படும் இலங்கை படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனரா என ஆராயப்பட்டதா என்பதை உறுதி செய்யக்கூடிய நிலையில் நியுயோர்க் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


படையினரை அமைதிப்பணிகளில் ஈடுபடுத்துவதற்கு முன்னர் எச்சரிக்கையுடன் செயற்படவேண்டிய சட்டரீதியான கடமை ஐக்கிய நாடுகளின் அமைதி பணிகளுக்கான திணைக்களத்திற்குள்ளது எனவும் ஜஸ்மின் சூக்கான தெரிவித்துள்ளார்.


ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் மனித உரிமை மற்றும் இலங்கையில் நீதி ஆகியவை குறித்த கொள்கை அடிப்படையிலான நிலைப்பாட்டின் அடிப்படையில் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வை வழங்கினால் அதற்காக விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிருவம் என்பதை ஐக்கிய நாடுகள் அமைதிப்படை இலங்கைக்கு வெளிப்படுத்த வேண்டிய தருணமிது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.