யாசகரின் சக்கர நாற்காலி திருட்டு! வவுனியாவில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாசகரின் சக்கர நாற்காலி திருட்டு! வவுனியாவில் சம்பவம்!


அங்கவீனமுற்ற யாசகர் ஒருவரின், யாசகம் பெறுவதற்காகச் செல்லும் சக்கர நாற்காலி திருடப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.


விபத்து ஒன்றில் தனது ஒரு காலினை இழந்த நபர் ஒருவர் வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் யாசகம் செய்து வருகிறார். வழமைபோல் யாசகம் பெற்று விட்டு கடந்த செவ்வாய் அன்று (02) இரவு ஓரிடத்தில் உறங்கியுள்ளார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது அங்கு தனது சக்கர நாற்காலி இல்லாமல் போனதை அறிந்துள்ளார்.


இதனையடுத்து குறித்த நபர் அப்பகுதியில் நின்ற பொதுமக்களின் உதவுடன் வவுனியா பொலிஸ் நிலையத்துக்குச் சென்று தனது சக்கர நாற்காலி திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார். 


குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிசார் விசாணைகளை முன்னெடுத்துள்ளனர்.


-கதீஸ்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.