
அங்கவீனமுற்ற யாசகர் ஒருவரின், யாசகம் பெறுவதற்காகச் செல்லும் சக்கர நாற்காலி திருடப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
விபத்து ஒன்றில் தனது ஒரு காலினை இழந்த நபர் ஒருவர் வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் யாசகம் செய்து வருகிறார். வழமைபோல் யாசகம் பெற்று விட்டு கடந்த செவ்வாய் அன்று (02) இரவு ஓரிடத்தில் உறங்கியுள்ளார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது அங்கு தனது சக்கர நாற்காலி இல்லாமல் போனதை அறிந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த நபர் அப்பகுதியில் நின்ற பொதுமக்களின் உதவுடன் வவுனியா பொலிஸ் நிலையத்துக்குச் சென்று தனது சக்கர நாற்காலி திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிசார் விசாணைகளை முன்னெடுத்துள்ளனர்.
-கதீஸ்