தனக்கு தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட 27 வயது இலங்கை அகதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனக்கு தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட 27 வயது இலங்கை அகதி!


தமிழகத்தில் அகதி முகாமில் இலங்கை இளைஞர் ஒருவர் தனக்கு தானே தீயிட்ட தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த அணைக்கட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.


27 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜனவரி 27ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.


இதனையடுத்து குறித்த இளைஞரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரச வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் மேலதின சிகிச்சைகளுக்காக அடுக்கம்பாறை அரச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.


எனினும், சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வாலாஜா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.