இலங்கையில் முதல் மூத்த பெண்ணொருவர் கொரோனா தொற்றினால் மரணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் முதல் மூத்த பெண்ணொருவர் கொரோனா தொற்றினால் மரணம்!


இலங்கையின் முதலாவது மிக வயதான கொரோனா மரணம் நேற்று  (07) காலி - கராபிட்டிய போதனா மருத்துவமனையில் இருந்து பதிவாகியது.


இறந்தவர் காலி - கராபிட்டியில் உள்ள பீட்டர் கிரிங்கொட மாவத்தை எனும் பகுதியில் வசிக்கும் 103 வயது பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


மேலும் குறித்த பெண் சனிக்கிழமை (06) அன்று தனது இல்லத்தில் இறந்துள்ளார், அதைத் தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக கராபிட்டி போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.


பிரேத பரிசோதனை போது நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.


இறந்த பெண்ணின் உறவினர்களில் 3 வயது குழந்தை உட்பட ஏழு பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.


குறித்த பெண்ணின் மரணத்தை தொடர்ந்து காலி மாவட்டத்தில் கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.