இலங்கையின் முதலாவது மிக வயதான கொரோனா மரணம் நேற்று (07) காலி - கராபிட்டிய போதனா மருத்துவமனையில் இருந்து பதிவாகியது.
இறந்தவர் காலி - கராபிட்டியில் உள்ள பீட்டர் கிரிங்கொட மாவத்தை எனும் பகுதியில் வசிக்கும் 103 வயது பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த பெண் சனிக்கிழமை (06) அன்று தனது இல்லத்தில் இறந்துள்ளார், அதைத் தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக கராபிட்டி போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
பிரேத பரிசோதனை போது நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இறந்த பெண்ணின் உறவினர்களில் 3 வயது குழந்தை உட்பட ஏழு பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் மரணத்தை தொடர்ந்து காலி மாவட்டத்தில் கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.