ரணிலே சிறந்த எதிர்க்கட்சித் தலைவர், அவர் பாராளுமன்றத்திற்கு வர வேண்டும் - பிரதமர் மஹிந்த

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரணிலே சிறந்த எதிர்க்கட்சித் தலைவர், அவர் பாராளுமன்றத்திற்கு வர வேண்டும் - பிரதமர் மஹிந்த

இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு தகுதியான நபர், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவிக்கின்றார்.

டெய்லி மீரர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில், அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை தவிர, வேறு எந்தவொரு நபருக்கும் பாராளுமன்றத்திற்கு பிரவேசிப்பதற்கான தகுதி கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருகைத் தருகின்றமை அரசியல் ரீதியில் அரசாங்கத்திற்கு நன்மை இல்லாதது என்றாலும், அவர் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டிய ஒருவர் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வலுவான எதிர்கட்சியொன்று அனைத்து சந்தர்ப்பங்களிலும் தேவை என கூறிய பிரதமர், தற்போதைய எதிர்கட்சி பயனற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் காணப்பட்ட கூட்டு எதிர்கட்சி பயனுள்ளது எனவும், தற்போதுள்ள எதிர்கட்சிக்குள் காணப்படுகின்ற முரண்பாடு ஜனநாயகத்திற்கு சரியில்லை எனவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வலுவான எதிர்கட்சியொன்று இருக்கும் போது, அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சரியான ஆட்சி முறையொன்றை கொண்டு செல்வதுடன், சவால் விடுக்கவும் முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.