திருமண நிகழ்வு காரணமாக இலங்கை கிரிக்கட் அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருமண நிகழ்வு காரணமாக இலங்கை கிரிக்கட் அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம்!

இலங்கை அணியின் மேற்கிந்திய தீவு சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மற்றும் ஆரம்ப துடுப்பெடுத்தாளர் லஹிரு திரிமன்ன ஆகியோர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

பெப்ரவரி 2 ம் திகதி நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இருவருக்கும் புதிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இருவரையும் இன்று (04) சிகிச்சை மையத்திற்கு அனுப்ப இலங்கை கிரிக்கெட் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர்களது நெருங்கிய தொடர்பாளர்களை அடையாளங்காண ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், இலங்கை கிரிக்கெட் வீரர் சதீர சமரவிக்ரெமாவின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது, மேலும் கொரோனா தொற்றுக்கு இலக்கான லஹிரு திரிமன்ன இதில் பங்கேற்றுள்ளார். இதன் காரணமாக, திருமணத்தில் பங்கேற்ற அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸின் திருமணம் அடுத்த வாரம் நடக்கவிருந்தது. குசால் மெண்டிஸும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால் திருமணம் ஒத்திவைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.