பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் இடையிலான நேரடி சந்திப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் இடையிலான நேரடி சந்திப்பு!

Mahida-and-Ranila

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இடையிலேயான சந்திப்பொன்று கடந்த வாரம் பெந்தோட்டையில் இடம்பெற்றுள்ளது.


சிங்கள செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளிக்கும் போதே இதனை ரணில், பிரதமருடன் நட்பு ரீதியான ஒரு சந்திப்பினை ஏற்படுத்தியதாக உறுதிப்படுத்தினார்.


"ஆம் அது ஒரு நட்பு ரீதியான சந்திப்பு; நாங்கள் சில காலமாகவே சந்திப்பதைப் பற்றி ஆலோசனை செய்து வந்தோம். ஏனையவர்களுக்கு பாராளுமன்றத்தில் பிரதமரை சந்திக்க வாய்ப்புண்டு; ஆனால் அது என்னால் முடியாது. அவர் நிதி அமைச்சராக இருக்கும் நிலையில், நாட்டில் பொருளாதாரம் குறித்தும் நான் அவருடன் கலந்துரையாடினேன்." என அவர் தெரிவித்தார்.


நாட்டில் எதிர்க்கட்சியை வழிநடத்த மிகவும் பொருத்தமான நபர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்பு வலியுறுத்தினார்.


இந்நிலையில், கடந்த வாரம் டெய்லி மிரருக்கு பிரதமர் கருத்து தெரிவிக்கையில், பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடியவர் விக்ரமசிங்கவை தவிர வேறு யாரும் இல்லை என்று தான் நினைக்கவில்லை என்றார்.


$ads={1}


அவருடைய இருப்பு அரசாங்கத்திற்கு பாதகமாக இருந்தாலும், அரசியல் ரீதியாகப் பார்த்தால், ரணில் விக்ரமசிங்கவே எதிர்கட்சிக்கு பொருத்தமானவர் என்றிருந்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.