ஐ.நா வுக்கு செல்கிறோம் என பயம் காட்ட வேண்டாம்; எமது ஜனாதிபதி தெளிவாகத்தான் உள்ளார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐ.நா வுக்கு செல்கிறோம் என பயம் காட்ட வேண்டாம்; எமது ஜனாதிபதி தெளிவாகத்தான் உள்ளார்!

காதர் மஸ்தான்

ஐ.நா.வுக்கு செல்கின்றோம் என பயம் காட்டவேண்டாம். அதனை பேசி தீர்க்கலாம் என மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தெரிவித்தார்.


வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் 4ஆவது ஆண்டு நிறைவு மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,


நாம் எது செய்தாலும் எதிர்கட்சி பிழையாகத் தான் கூறுவார்கள். இப்போது ஐ.நாவுக்கு போகிறோம் என பயம் காட்டுகிறார்கள். எமது ஜனாதிபதி தெளிவாக இருக்கிறார். இது பல் சமூகம் வாழும் நாடு. பல பிரச்சினைகள் இருக்கும். அதனை பேசித் தீர்க்கலாம் என்றார்.


இம்முறை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரம் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் மிகவும் சூடு பிடிக்கும் என்றிருக்கும் நிலையிலேயே இவர் இவ்வாறு கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.