கடந்த ஏப்ரல் 2019 இல் நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணையத்தின் 472 பக்கங்களை கொண்ட இறுதி அறிக்கை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் உச்சநீதிமன்ற நீதிபதி ஜனத் டி சில்வா இந்த அறிக்கையை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் ஒப்படைத்தார்.
2019 செப்டம்பர் 22 அன்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை விசாரிக்க ஜனாதிபதி விசாரணை ஆணையத்தை நிறுவினார்.
தாக்குதல்கள் தொடர்பான முதல் இடைக்கால அறிக்கை 2019 டிசம்பர் 20 அன்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்டது, பின்னர் இரண்டாவது இடைக்கால அறிக்கை 2020 மார்ச் 02 அன்று ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.