
பெண்ணொருவர் மற்றும் அவரின் மகன் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்பாறை தமன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
13 வயதுடைய சிறுவனும் அவரது 33 வயதான தாயுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் திஸ்ஸமஹராம பகுதியில் வசிப்பவர் என்பது தெரியவந்துள்ளதுடன், சம்பவம் நடந்த இடத்திலிருந்து அவர் தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தமன காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.