கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முதல் மின்னுற்பத்தி நிலையம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முதல் மின்னுற்பத்தி நிலையம்!


கழிவுகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் இலங்கையின் முதல் மின் உற்பத்தி நிலையம் தேசிய கட்டத்தில் சேர்க்கப்படவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

வத்தள - ஹெரவலபிட்டியில் அமைக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையம் எதிர்வரும் புதன்கிழமை (17) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இந்த ஆலை ஒரு நாளைக்கு 700 தொன் கழிவுகளைப் பயன்படுத்தி 10 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.

இது தவிர, மக்கும் கழிவுகளைப் பயன்படுத்தி உயிர்வாயு மின்சாரம் தயாரிக்கும் முதல் திட்டம் இந்த ஆண்டு இறுதியில் மாத்தறையில் ஆரம்பிக்கப்படும் என்று டளஸ் அழகபெரும தெரிவித்தார்.

மாத்தறை மாவட்டத்தின் கோட்டாவிலவில் அமைக்கப்பட்டு வரும் இத்திட்டத்தில், ஒரு நாளைக்கு 40 தொன் குப்பைகளைப் பயன்படுத்தி 400 கிலோவோட் மின்சாரத்தை தேசிய கட்டத்தில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.