கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு!


வெல்லம்பிட்டியில் சமீபத்தில் ஒரு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் இன்று (04) பிற்பகல் பொலிஸாருடனான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


வெல்லம்பிட்டி - வெலேவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை உடைத்து, தங்க நகை திருட்டில் ஈடுபட்ட நான்கு நபர்களில் ஒருவர் என குறித்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.


மேலும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் துப்பாக்கிச் சூட்டில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.