திருமண வைபத்தில் அதிகபட்ச விருந்தினர்களின் எண்ணிக்கையில் மீண்டும் திருத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருமண வைபத்தில் அதிகபட்ச விருந்தினர்களின் எண்ணிக்கையில் மீண்டும் திருத்தம்!

ஒரு திருமண வைபவமொன்றில் அதிகபட்ச விருந்தினர்களின் எண்ணிக்கையை 150 முதல் 50 வரை திருத்தும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவுவதற்கான ஒரு மூலகாரண இடமாக திருமணங்கள் அடையாளம் காணப்பட்டதால், சுகாதார அதிகாரிகள் இவ்வாறான மாற்றம் ஒன்றை சிந்தித்திருந்தனர்.

எவ்வாறாயினும், திருமண வைபவங்களொல் அதிகபட்ச விருந்தினர்களின் எண்ணிக்கையில் எந்தவித மாற்றங்களும் இல்லை எனவும், அதிக பட்ச விருந்தினர்களின் எண்ணிக்கை 150 ஆக இருக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்தார்.

பல தொழில்முறை குழுக்களின் கோரிக்கைகளுக்கு இணங்காவே இம்முடிவு எட்டப்பட்டதாவும் அமைச்சர் தெரிவித்தார்.

அவர்களின் வாழ்வாதாரத்திற்கான கோரிக்கைகள் மற்றும் விளைவுகளை கருத்தில் கொண்டு, திருமண வைபவம் ஒன்றின் அதிகபட்ச விருந்தினர்கள் தொடர்பாம சட்டத்தை திருத்த வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த முடிவு எந்த நேரத்திலும் மாற்றமடையலாம் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்தார்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.