சர்வதேசத்துக்கு வழங்கியுள்ள வாக்குறுதியை மீறி செயற்பட்டால் நாடு தனித்துவிடப்படும்! -ஹிருணிகா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்வதேசத்துக்கு வழங்கியுள்ள வாக்குறுதியை மீறி செயற்பட்டால் நாடு தனித்துவிடப்படும்! -ஹிருணிகா


தற்போதைய அரசாங்கம்  ஒரு நாடு, ஒரு கொள்கை என சர்வதேசத்துக்கு வழங்கியுள்ள வாக்குறுதிக்கமைய செயற்படவில்லை எனில் நாடு தனித்துவிடப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.


குருநாகல் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


இதனிடையே, வெளிநாடுகளுக்கு நாட்டின் ஒரு பகுதியை வழங்குவதாக வாக்குறுதியளித்து கடன்களைப் பெற்றுக்கொண்ட நிலையில், வழங்கிய வாக்குறுதியை மீறி செயற்படும் போலியான அரசாங்கமே தற்போது உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், இவ்வாறு வெளிநாடுகளுக்கு நாட்டை பகுதி பகுதியாக விற்பனை செய்வதன் மூலம் நாட்டில் எதுவும் எஞ்சியிருக்கப்போவதில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.


மேலும், தற்போதைய தலைவர்கள் நாட்டை மூன்று நான்கு பகுதிகளாக உடைத்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும், தற்போதைய அரசாங்கம் எதிர்கால சந்ததிக்கான நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.