திருமண நிகழ்வுகளில் கொரோனா அதிகளவில் பரவலாம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருமண நிகழ்வுகளில் கொரோனா அதிகளவில் பரவலாம்!

இலங்கையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை திறனாக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (05) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வைத்தியர் ஹரித அளுத்கே இதனை தெரிவித்துள்ளார். 

கொரோனா மரணங்களில் 70 வீதமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் குறித்த வயதிற்கு உட்படவர்களுக்கிடையில் தொற்றாளர்கள் அதிகரிப்பின் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

திருமண நிகழ்வுகள் போன்ற நிகழ்வுகளில் அதிகளவான மக்கள் ஒன்றிணைவதால் தொற்று அதிகளிவில் பரவலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதன்போது தொற்றாளர்களுக்கு வழங்கப்படும் எக்மோ சிகிச்சை குறிப்பிட்ட அளவில் இருப்பதால் அதனை அதிகரிக்க நடிவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.