கடனை மீளச் செலுத்தவே கசிப்பு காய்ச்சினேன்! கசிப்புடன் கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடனை மீளச் செலுத்தவே கசிப்பு காய்ச்சினேன்! கசிப்புடன் கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம்!

‘வங்கிக் கடனை மீளச் செலுத்தவே கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டேன்’ என கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளார்.

சாவகச்சேரி மீசாலை மேற்கு பகுதியில் கசிப்பு உற்பத்தி தொடர்பான தகவல் மது வரித்திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்றதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து பெருமளவான கசிப்பையும் கைப்பற்றினர்.

அவரிடம் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்தபோது, தான் வங்கியில் பெற்ற கடனை மீள செலுத்துவதற்கு அதிக வருமானம் தேவையாக உள்ளமையால் தான் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டேன் என தெரிவித்துள்ளார்.

குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்தி சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

-மயூரன்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.