மதத்தலைவர்களான தேரர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று கண்டியில் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மதத்தலைவர்களான தேரர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று கண்டியில் ஆரம்பம்!

corona vaccine for thero

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி இன்று (20) கண்டியில் உள்ள தேரர்கள் குழுவினருக்கு வழங்குவதன் மூலம் மதத்தலைவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில் மதத்தலைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி கண்டியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,


இலங்கையில் உள்ள அனைத்து மதத்தலைவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


இன்றைய தினம் கண்டி மாவட்டத்தில் உள்ள மதத்தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் பதுளை மாவட்டத்தில் உள்ள மதத்தலைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


-சி.எல்.சிசில்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.