வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு இலவச விமான பயணச்சீட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு இலவச விமான பயணச்சீட்டு!


வெளிநாடுகளில் பணிப்புரியும் இலங்கை பணியாளர்களை விரைவாக நாட்டுக்கு அழைத்துவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.


தொழிலமைச்சில் இன்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.


"வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுச் செய்து வெளிநாடு சென்ற பணியாளர்களுக்கு நாடு திரும்ப விமான பயணச்சீட்டை பெற்றுக் கொள்வதில் சிரமம் நிலவினால் அது குறித்து தேடிப் பார்த்து விமான டிக்கட்டுகளை பெற்று அவர்களுக்கு வழங்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.


அதேவேளை, வெளிநாடுகளில் தங்கியுள்ள பணியாளர்கள் நாடு திரும்புவதற்கு விமான டிக்கட்டுக்களை பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கினால் அதாவது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்ற பணியாளர்களுக்கு இலவசமாக விமான பயணச் சீட்டுக்களை பெற்றுக் கொடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளேன்.


இலங்கைக்கு 1,000 பணியாளர்களை அழைத்து தனிமைப்படுத்துவதில் சிரமம் உள்ளது. ஆகவே தனிமைப்படுத்தல் நிலையங்களில் இடவசதியை அதிகரிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளேன்" என்றார்.


அதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செலவில் 09 மாகாணங்களிலும் தனிமைப்படுத்தல் மையங்களை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாக  தெரிவித்தார்.


இதற்கான அனுமதி பெருவது தொடர்பில் தேசிய கொரோனா தடுப்பு பணிக்குழுவுடன் கலந்துரையாடப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.