பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அரசாங்கம் சிறிதளவு கூட மதிக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் குறித்த பிரதமரின் சமீபத்தைய அறிக்கையை ஏற்றுக்கொள்ளாததன் மூலம் அவரை அரசாங்கம் அவமானப்படுத்தியுள்ளது என முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார்.
அரசாங்கத்திற்குள் காணப்படும் சிறிய குழுவினர் பிரதமரை அவமதிப்பது அவரது அறிக்கைகளை புறக்கணிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தங்களின் நடவடிக்கைள் மூலம் பிரதமரை அவமரியாதை செய்கின்றனர் இந்த மோதல் அரசாங்கம் உரிய கொள்கைகளை பின்பற்றவில்லை என்பதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.