பிரதமர் மஹிந்தவை அரசாங்கம் சிறிதளவு கூட மதிப்பதில்லை! அவரை அவமானப்படுத்தியுள்ளது! -ரவூப் ஹக்கீம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதமர் மஹிந்தவை அரசாங்கம் சிறிதளவு கூட மதிப்பதில்லை! அவரை அவமானப்படுத்தியுள்ளது! -ரவூப் ஹக்கீம்


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அரசாங்கம் சிறிதளவு கூட மதிக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.


கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் குறித்த பிரதமரின் சமீபத்தைய அறிக்கையை ஏற்றுக்கொள்ளாததன் மூலம் அவரை அரசாங்கம் அவமானப்படுத்தியுள்ளது என முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார்.


அரசாங்கத்திற்குள் காணப்படும் சிறிய குழுவினர் பிரதமரை அவமதிப்பது அவரது அறிக்கைகளை புறக்கணிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அவர்கள் தங்களின் நடவடிக்கைள் மூலம் பிரதமரை அவமரியாதை செய்கின்றனர் இந்த மோதல் அரசாங்கம் உரிய கொள்கைகளை பின்பற்றவில்லை என்பதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.