
சர்வதேச பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் உட்பட இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான அனைத்து வழிமுறைகளையும் ஆராயுமாறு ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த சில வருடங்களில் ஜனநாயக ஸ்தாபனங்களை மீளகட்டியெழுப்புவதில் கடினமாக போரடி இலங்கை அடைந்த முன்னேற்றங்கள் பாதிக்கப்படும நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிறுத்தவேண்டும் எனவும் ஐ.நா நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2015 முதல் 2019 முதல் இலங்கைக்கு ஐ.நா நிபுணர்கள் மேற்கொண்டபத்து விஜயங்களின் பின்னர் முன்வைத்த 400 பரிந்துரைகளிற்கு இலங்கை அளித்த பதில்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் நிபுணர்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
இலங்கையில் மனித உரிமைகளை கண்காணிப்பதற்காக சுயாதீன மனித உரிமைகள் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும், கடந்தகால குற்றங்களிற்கு பொறுப்புக் கூறப்படுவதை உறுதி செய்யவேண்டும் எனவும் ஐ.நா நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மனித உரிமை பேரவை மற்றும் உறுப்பு நாடுகள் சுயாதீன கண்காணிப்பை அதிகரிக்கவேண்டும்,இலங்கையில் மனித உரிமை நிலவரத்தை ஆய்வு செய்து அறிக்கையிடவேண்டும்,பக்கச்சார்பற்ற சுயாதீன சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஏற்படுத்தவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.