சாதாரண தர பெறுபேறுகள் வெளியிடும் திகதி தொடர்பாக வெளியான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாதாரண தர பெறுபேறுகள் வெளியிடும் திகதி தொடர்பாக வெளியான அறிவிப்பு!

education ministry

மார்ச் 01 முதல் 10ஆம் திகதிவரை நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிட முடியும் என எதிர்ப்பார்ப்பதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஜூன் மாதத்தில் இருந்து உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நெலும் மாவத்தையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இன்று (22) இதனைக் கூறியுள்ளார்.

சாதாரண தர தேர்வுக்கான கொரோனா சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் ஏற்பாடுகள் பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார மருத்துவ அலுவலகங்களால் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

$ads={1}

தற்போது மாணவர்களின் அனுமதி அட்டைகள் பாடசாலைகளில் விநியோகிக்கப்பட்டுள்ளன. அனுமதி அட்டைகளைப் பெறாத தனியார் விண்ணப்பதாரர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் வலைத்தளத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதல்முறையாக பரீட்சைக்கு தோற்றும் மாணவர் ஒருவர் தேவைப்பட்டால் வலைத்தளத்தின் மூலம் பெயர், பொருள் மற்றும் பாடம், மொழி மூலத்தை திருத்தம் செய்துகொள்ள  முடியும் என்றார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.