நானுஓயாவில் பவுஸரில் மோதி இழுத்துச் செல்லப்பட்ட பஸ்! 13 பேர் காயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நானுஓயாவில் பவுஸரில் மோதி இழுத்துச் செல்லப்பட்ட பஸ்! 13 பேர் காயம்!


நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


இந்தச் சம்பவம் இன்று (22) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


மொனராகலை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மரண வீடு ஒன்றுக்காக சென்று கொண்டிருந்த குறித்த பஸ் ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து பவுஸர் ஒன்றுடன் மோதி இழுத்துச் செல்லப்பட்டு மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.


இந்த பஸ்ஸில் 18 பேர் பயணித்துள்ளதுடன் இவர்களில் 13 பேர் பலத்த காயங்களுடன் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பஸ்ஸின் தடுப்பு கட்டையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்விபத்து இடம்பெற்றதாக பஸ்ஸில் பயணித்த ஒருவர் தெரிவித்தார்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


-க.கிஷாந்தன்





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.