ரஞ்சனின் பாராளுமன்ற இருக்கை பாதுகாப்பானது, ஆனால் அவரது உயிருக்கு ஆபத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஞ்சன் ராமநாயக்கவினை சந்திக்க சென்று, பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) காலை அங்குனகோலாபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு சென்று பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நிலை குறித்து சுக துக்கங்களை விசாரித்து அறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.