இரண்டு நாள் விஜயத்தை முடித்த பாகிஸ்தான் பிரதமர் விடைபெற்றார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரண்டு நாள் விஜயத்தை முடித்த பாகிஸ்தான் பிரதமர் விடைபெற்றார்!


இலங்கைக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று (24) மாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.


நாட்டிற்கு வருகை தந்த, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இன்று கலந்துரையாடியிருந்தார்.


இதேவேளை, 15 முஸ்லிம் பிரதிநிதிகளும் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்து கலந்துரையாடியதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.


$ads={1}


ஜனாதிபதி செயலகத்தில் முற்பகல் 10.30 அளவில் இந்த சந்திப்பு நடைபெற்றது.


ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு பின்னர் பாகிஸ்தான் பிரதமர் கொழும்பில் நடைபெற்ற வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்.


அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய போசனத்திலும் பாகிஸ்தான் பிரதமர் கலந்துகொண்டிருந்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.