நாளைய தினம் (01) கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள அனைத்து மாணவர்களும் 45 நிமிடங்களுக்கு முன் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
அதேபோல், அவசர நிலைமைகளுக்காக நாடு முழுவதும் 40 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றதென கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.
அத்துடன் பரீட்சைகள் நடைபெறும் அனைத்து மத்திய நிலையங்களிலும் இன்றைய தினம் தொற்று நீக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
யாழ் நியூஸ் சார்பாக பரீட்சை எழுதும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நல்வாழ்த்துக்கள்!