விருந்துபசாரங்கள், உற்சவங்கள், மற்றும் திருமண நிகழ்வுகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை தொடர்பான திருத்தப்பட்ட சுற்றறிக்கையினை வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு தேசிய செயலணி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக விருந்துபசாரங்கள், உற்சவங்கள், மற்றும் திருமண நிகழ்வுகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை தற்போது வரையறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .