ஜனாஸா எரிப்பு விவகாரம் ஒரு தீர்க்கப்பட்ட பிரச்சினை; நாடுகள் தனிப்பட்ட முடிவுகளை எடுக்க முடியும்! -பிரதமர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாஸா எரிப்பு விவகாரம் ஒரு தீர்க்கப்பட்ட பிரச்சினை; நாடுகள் தனிப்பட்ட முடிவுகளை எடுக்க முடியும்! -பிரதமர்

கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதா அல்லது எரிப்பதாக என்பது தொடர்பில் தனிப்பட்ட நாடுகள் மிகவும் பொருத்தமான முடிவை எடுக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 

“இது ஒரு தீர்க்கப்பட்ட பிரச்சினை. இது தொடர்பாக தனிப்பட்ட நாடுகள் மிகவும் பொருத்தமான முடிவை எடுக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இறந்த உடல்கள் மூலம் வைரஸ் பரவாமல் தடுக்க சிறந்த முறையை தெரிவு செய்ய வேண்டும். நாடு ஒன்றுக்கு மிக முக்கியமானது பொது சுகாதாரம் ஆகும்.”

முஸ்லிம் அமைப்புகள் இப்போது தமிழ் புலம்பெயர் குழுக்களுடன் கைகோர்த்துள்ளன. இந்த முஸ்லீம் அமைப்புகள் அடக்கம் தொடர்பான விவகாரத்தில் அரசாங்கத்திற்கு எதிராக  நிற்கின்றன. அதை எவ்வாறு எதிர்கொள்வது? என அவரிடம் டெய்லி மிரர் பத்திரிகை நேர்காணலில் கேட்கப்பட்ட போது அதற்கு பதில் அளித்த அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

மூலம் - மடவளை நியூஸ்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.